உகாண்டாவில், திருமணம் செய்து கொள்ளாமல் கருத்தரிக்கும் பெண்கள் தங்களுடைய குடும்பத்திற்கு அவமானத்தை கொண்டுவருவதாக கருதப்பட்டனர்.
எனவே, அத்தகைய பெண்களை தனியான ஒரு தீவுக்கு கொண்டு சென்று அங்கு இறந்து போக விட்டுவிடுவார்கள்.
அதில் அதிர்ஷ்டசாலிகளான பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். அப்படி மீட்கப்பட்ட ஒருவர் இன்னும் உயிர் வாழ்கிறார்.
“நான் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருந்ததை அறிந்து கொண்ட என்னுடைய குடும்பத்தார், ஒரு படகில் என்னை ஏற்றி, அகாம்பேனேவுக்கு (தண்டனை தீவு) கொண்டு சென்றனர்.
நான்கு நாட்கள் உணவும், குடிநீரும் இன்றி அங்கேயே இருந்தேன்” என்கிறார் மௌடா கயிதாராகாபிவி என்ற பெண்.
அப்போது வயது 12. “நான் மிகவும் பசியோடு, குளிரோடு இருந்ததை இப்போதும் நினைவு கூறுகிறேன்.
நான் ஏறக்குறைய செத்து கொண்டிருந்தேன்”. 5ஆம் நாள் அங்கு வந்த மீனவர் ஒருவர், என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.
“நான் நம்பவில்லை. என்னை எமாற்றி, தண்ணீரில் தள்ளிவிடதானே அழைக்கிறீர்கள்” என்று நான் அவரிடம் கேட்டேன்”.
மீட்ட கணவர்
“ஆனால், உன்னை என்னுடைய மனைவியாக்கி கொள்ள அழைத்து செல்வதாக கூறி, என்னை இங்கு கொண்டு வந்தார்” என்று மகிழ்ச்சியோடு நினைவு கூருகிறார்.
அவருடைய கணவரோடு வாழ்ந்த வீட்டின் வராந்தாவில் எளிமையான நாற்காலியில் உட்கார்ந்திருந்த மௌடா கயிதாராகாபிவி.
தண்டனை தீவில் இருந்து புன்யான்னி ஏரிக்கு குறுக்கே 10 நிமிட படகு சவாரி செய்தால் வந்தடைகின்ற தொலைவில் இருக்கின்ற காஷூங்யிரா கிராமத்தில் அவர் வாழ்ந்து வருகிறார்.
இந்த தண்டனை தீவு நீரால் சூழப்பட்ட புற்கள் நிறைந்திருக்கும் பகுதியாகும்.