மசாலா வாசனை வருவதாகக் தெரிவித்து, பிரிட்டன் தலைநகர் லண்டனில் செயல்பட்டு வரும் ஓர் இந்திய உணவகத்துக்கு அங்குள்ள நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
லண்டனில் “குஷி ரெஸ்டாரன்ட்’ என்ற பெயரில் இந்திய உணவு
வகைகளை தயாரிக்கும் உணவகம் இயங்கி வருகின்றது.
இந்த உணவகத்திலிருந்து மசாலா பொருள்களின் வாசனை
வருவதாகவும், இதனால் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும்
கூறி அங்குள்ள மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில், குடியிருப்பு வாசிகள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி கிறிஸ்டீனா ஹேரிஸன் முன்பு
நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது குடியிருப்புவாசிகள் சார்பில் முன்னிலையான வழக்குரைஞர் கூறியதாவது: மேற்குறிப்பிட்ட உணவகத்தின் சமையலறையில் புகையை வெளியேற்றுவதற்கு முறையான வசதிகள் இல்லை.
எனவே, உணவகத்திலிருந்து வெளிவரும் மசாலா வாசனையால்
அந்த பகுதியில் குடியிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, உணவக விதிகளை மீறியதற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குஷி ரெஸ்டாரன்ட்
உணவகத்தின் உரிமையாளர்களான ஷபனா மற்றும் முகமது குஷி
ஆகியோருக்கு தலா 788 பவுண்டுகள் (சுமார் ரூ.66 ஆயிரம்) அபராதம்
விதித்து உத்தரவிட்டார்.