புலி, சிங்கம், யானை, திமிங்கலம் மட்டுமல்லாமல், இந்த உயிரினங்களும் அழகுதான் என புகைப்பட கலைஞர் ராஸ் பைப்பரின் படங்கள் கூறுகின்றன.
பூமியில் இருக்கும் பல உயிரினங்கள் கண்ணைக் கவரும் வண்ணத்தில் இருந்தாலும், புலி, சிங்கம், யானை போன்ற பெரிய மிருகங்களின் ஆளுமை காரணமாக கவனிக்கப்படாமல் போகின்றன. சாதாரணமாக காணப்படாத பல உயிரினங்களிலும் எவ்வளவு அழகு மற்றும் கவர்ச்சி உள்ளன என காட்டுகிறார் புகைப்பட கலைஞர் ராஸ் பைப்பர். இது ஒருவகையான குளவியின் படம்.
ஜெல்லி மீன் மற்றும் பவழப்பாறை போன்று நீரில் வாழும் ஒரு உயிரினம் இந்த ஸ்னைடாரியா. அவற்றின் உடலுக்கு இரண்டு வடிவங்கள் உண்டு.
ஜெல்லி மீன் போன்று வளைந்து நெளிந்து இருக்கும் உருவம் ஒன்று, மற்றொன்று இந்த படத்தில் இருப்பது போன்று பரந்து விரிந்த நிலையான உருவம்.
தமது நீண்ட கைகளை உணவைப் பெறுவதற்கும், அதை சீரணிக்கவும், இன விருத்திக்கும் பயன்படுத்துகின்றன.
ஒவ்வொரு பெருங்கடலின் அடிப்பகுதியில் ஜெல்லி மீன்களை காணலாம். பெரும்பாலானவை நீந்தும் தன்மை கொண்டிருந்தாலும், சில வகை மீன்கள் கடற்படுகையிலேயே தங்கி வாழ்கின்றன.
இந்தப் படத்தில் ஒரு ஜெல்லி மீனுடன் ஒட்டிக் கொண்டுள்ள ஒட்டுண்ணிகளை காணலாம்.
லொரிசிஃபேரா எனும் இந்த கடற்வாழ் உயிரினம் அண்மையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான நீளமே கொண்ட இந்த உயிரினத்தில் ஆயிரம் செல்களுக்கு மேலாக உள்ளன என்கிறார் ராஸ் பைப்பர்
அனேலிட்ஸ் எனப்படும் இந்தப் பூச்சிவகை, மண்புழு போன்ற இனத்தை ஒத்தது. அதன் உடல் அமைப்பு மணலில் குழிபறித்து வாழவும் வழி செய்யும் அதே நேரத்தில் வேகமாக நீந்தவும் உதவுகிறது.
நத்தை, சிப்பி போன்ற இனத்தைச் சேர்ந்த வகையான உயிரினத்தின் வண்ணம் கண்ணைப் பறிக்கும் வகையில் உள்ளது. அந்த இனத்தில் மற்றும் பத்தாயிரத்துக்கும் அதிகமான வகைகள் உள்ளன.
மொலுஸ்கஸ் எனப்படும் இந்த வகை உயிரினங்கள் மிகவும் மென்மையான உடலமைப்பைக் கொண்டவை. கடலட்டை போன்றவை மொலுஸ்கஸ் இனத்தைச் சேர்ந்தவை.