நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோவை நீக்கும் வகையில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெந்நிற உடைகளுடன் கைகளை ரோஜா பூக்களை ஏந்தி வெனிசுலா பெண்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உடனடியாக அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெந்நிற உடைகளுடன் கைகளை ரோஜா பூக்களை ஏந்தி வெனிசுலா நாட்டுப் பெண்கள் நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் பல முக்கிய நகரங்களில் நேற்று நடந்த இந்த போராட்டத்தின்போது வெனிசுலா தேசிய கீதத்தை பாடியவாறு ஊர்வலமாக சென்ற பெண்களை தடுக்க முயன்ற பாதுகாப்பு படையினருக்கு காதலின் சின்னமான ரோஜாப் பூக்களை தந்தனர்.
அவர்களை கைது செய்யவும் முடியாமல் தடுத்து நிறுத்தவும் இயலாமல் பாதுகாப்பு படையினர் அசடு வழியும் காட்சிகள் பிரபல ஊடகங்களில் வெளியாகி வருகிறது.