அமெரிக்க ராணுவம் இதுவரை போரில் பயன்படுத்தியதிலேயே மிகப்பெரிய அணு ஆயுதமில்லாத வெடிகுண்டுக்கு, ‘அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய்’ என பெயரிட்டது.
இதற்கு போப் ஃபிரான்சிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
”அந்த பெயரை கேட்ட போது நான் கேவலமாக உணர்ந்தேன்,” என்று வத்திகானில் மாணவர்கள் மத்தியில் பேசிய போப் தெரிவித்தார்.
”ஒரு தாய் உயிர் மட்டுமே கொடுப்பார். ஆனால், இது மரணத்தை மட்டுமே கொடுக்கிறது.
இந்த கருவியை தாய் என்று அழைக்கிறோம். என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
அமெரிக்காவின் மாபெரும் குண்டு: 36 தீவிரவாதிகள் பலி
கடந்த மாதம், ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் மீது சுமார் 9,800 கிலோ எடை கொண்ட குண்டு ஒன்றை அமெரிக்கா வீசியது குறிப்பிடத்தக்கது.
நங்கர்ஹர் மாகாணத்தில் ஐ எஸ் குழுவினர் பயன்படுத்தி வந்த சுரங்கங்களை குறிவைத்து அமெரிக்க விமானம் ஒன்றின் மூலம் குண்டு வீசப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.