மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் புகைப்படக் கலைஞராக இருக்கும் அவினாஷ் அங்குள்ள குரங்குகளை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார்.
அப்போது, அங்கு ஒரு அம்மா குரங்கு அவினாஷின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அம்மா குரங்கு தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு இருக்கும்போதே, திடீரென, தனது குழந்தை குரங்கு சுயநினைவு இழந்து விடுகிறது.
குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு அம்மா குரங்கு அழுகிறது.
தொடர்ந்து இந்தக் காட்சிகளை படம் எடுத்துக் கொள்கிறார் அவினாஷ்.
அவரால் இந்த காட்சிகளை படம் பிடித்த பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பேச முடியவில்லை.
பாலூட்டி வகையைச் சேர்ந்த குரங்கிற்கும் இந்த அளவிற்கு பாசம் இருக்குமா? அந்த சோகத்தை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை என்று வருந்துகிறார் அவினாஷ்.
இந்தப் புகைப்படத்தை கடந்த ஏப்ரல் மாதம் அவினாஷ் எடுத்துள்ளார். ஆனாலும், தற்போதுதான் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
அத்துடன் தாய்ப் பாசத்தை உணர்த்தும் மேலும் சில அன்னை குரங்குகளின் புகைப்படங்கள் உங்களுக்காக.