பரத் நடிக்கும் `கடைசி பென்ச் கார்த்தி’ படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஜான் சுதிர் உலக மொழிகள் எல்லாவற்றிலும் படம் தயாரிக்க விரும்புகிறார்.
கடந்த 2௦13-ஆம் ஆண்டு நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக சுமந்த் நடிக்க `ஏமோ குர்ரம் எகரா வச்சு’ என்ற படத்தை தெலுங்கில் தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக நேரடியாக களத்தில் இறங்கினார்.
அதற்கு பிறகு ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்து விக்கி டோனர் என்ற ஹிந்தி படத்தை தெலுங்கில் சுமந்தை வைத்து ரீமேக் செய்தார்.
பின்னர் தமிழில் களமிறங்கிய அவர், அதன் படி ரவிபார்கவன் இயக்கத்தில் பரத் நடித்து வரும் `கடைசிபென்ச் கார்த்தி’ என்ற படத்தை தமிழிலும் `மல்லி பிரேமிஸ்தே’ என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்து வருகிறார்.
இதுவே பரத்தின் நேரடித் தெலுங்குப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி இயக்கத்தில், மரகதமணி இசையில் `ஷோ டைம்’ என்ற பெயரில் தெலுங்கிலும், `காட்சி நேரம்’ என்ற பெயரில் தமிழிலும் புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.
அடுத்ததாக மஞ்சு விஷ்ணு நடிக்க, கார்த்திக் இயக்கத்தில், எஸ்.எஸ்.தமன் இசையமைக்க ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார்.
அதன் ஆரம்ப விழா விரைவில் நடைபெற உள்ளது.
இதை தவிர தென்னகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற `காஞ்சனா 2′ படத்தை கொரியா, சைனா, தாய்லாந்த், ஜப்பான் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையையும் வாங்கி இருக்கிறார்.
ஒரு தென்னிந்திய படத்தை உலக அளவில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியிருக்கும் முதல் தயாரிப்பாளர் இவர்தான்.
உலக நாடுகளில் உள்ள அனைத்து மொழிகளிலும் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஜான்சுதிர்.
இந்திய கலைஞர்களை கொண்டு வெளிநாடுகளிலும், வெளிநாடுகளில் உள்ள கலைஞர்களை இந்தியாவிலும் பயன்படுத்தி படங்களை தயாரித்து வரும் ஜாக்கிஜான், டோனிஜா ஆகியோருக்கு ஜான்சுதிர் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.