மராத்தி பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மராத்தி பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர் தயாரித்த தோல் தாஷே கடந்த 2013ம் ஆண்டு வெளியானது.
படத்தின் கதையை பலர் பாராட்டியபோதும் படம் ஓடவில்லை. இதனால் தப்கிருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
படத்தால் நஷ்டம் அடைந்ததால் தப்கிருக்கும், அவரது மனைவி பிரியங்காவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
பண நெருக்கடியால் மன நிம்மதி இல்லாமல் இருந்து வந்தார் தப்கிர்.
தற்கொலை
புனேவில் உள்ள பிரசிடென்ட் ஹோட்டலுக்கு சென்ற தப்கிர் அங்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.
ஹோட்டல் அறையில் அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முகநூல்
தற்கொலை செய்யும் முன்பு தப்கிர் முகநூலில் தனது முடிவுக்கான காரணத்தை விரிவாக தெரிவித்துள்ளார்.
அன்னையர் தினத்தன்று இறந்த தனது தாயிடம் போவதாக அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.
பண பிரச்சினையால் எனக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.
மேலும் என்னை பற்றி வதந்திகளையும் பரப்பினார் என்று தப்கிர் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.
மனைவி என் மீது பொய் புகார்கள் தெரிவித்தார்.
எங்களின் 2 குழந்தைகளையும் பார்க்கவே விடவில்லை. மேலும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள கொடுத்த பணத்தை வைத்து கார் வாங்கிவிட்டு எப்பொழுது பார்த்தாலும் பணம் கேட்கிறார்.
பண பிரச்சினை, குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்கிறேன் என தப்கிர் முகநூலில் கூறியுள்ளார்.