பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு, கருக்கலைப்பு செய்யக் கோரிய மனுவை பரிசீலிக்க இந்திய மருத்துவர் குழு ஆலோசனை நடத்தியுள்ளது.
வளர்ப்புத் தந்தையால் தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சிறுமி, இன்னும் நான்கு மாதங்களில் குழந்தை பெற்றெடுக்கும் நிலையில் இருப்பதாக ரோதக் நகர வடக்குப் பகுதி காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
சிறுமியின் வளர்ப்புத் தந்தை கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
இந்திய சட்டங்களின்படி, பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்ற சூழ்நிலையைத் தவிர, இருபது வாரத்தை தாண்டிய கருவை கலைக்க முடியாது.
சிறுமியின் கருக்கலைப்புக் கோரிக்கை பற்றிய முடிவு, தற்போது நீதிமன்றத்திடம் உள்ளது.
பாலியல் வல்லுறவு
இந்தியாவில், பாலின விகிதாசாரத்தை சமமாக வைக்கும் நோக்கில் கருக்கலைப்பு தொடர்பான கடுமையான சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆண் குழந்தைகளுக்கு இந்தியக் கலாச்சாரத்தில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
எனவே பெண் குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள், பெண்ணின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொண்டு, லட்சணக்கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே கலைக்கப்படும் நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது.
கடந்த சில மாதங்களில் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு, கருவுற்ற சில பெண்கள், கரு இருபது வார வளர்ச்சியடைந்த நிலையில் கருக்கலைப்பு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதுபோன்ற மனுக்கள் குறித்து மருத்துவ நிபுணர்களிடம் நீதிமன்றம் கருத்து கேட்பது வழக்கமான நடைமுறை.
அண்மையில் ஹரியானா மாநிலம் ரோதக்கில் நடைபெற்றுள்ள இந்த பாலியல் வல்லுறவு வழக்கில், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டுமென்ற குடும்பத்தின் கோரிக்கையை, மருத்துவ அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு கல்லூரியைச் சேர்ந்த (பி.ஜி.ஐ.எம்.எஸ்) மருத்துவர்கள் கூடி பரிசீலித்தனர்.
பெண்
சிறுமி கருவுற்றிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
“காவல்துறையினரும், அதிகாரிகளும் நீதிமன்றத்திடம் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யலாமா என்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் அஷோக் செளஹான் தெரிவித்தார்.
சென்னை அருகே ஜெர்மன் பெண் மீது பாலியல் தாக்குதல் தென்னிந்திய நடிகை மீது பாலியல் தாக்குதல் – மூவர் கைது இந்த வழக்கில் கருக்கலைப்பு என்பது “வரம்புக்கு உட்பட்டது” என்று அவர் மேலும் கூறினார்.