நடிகர் | தாமோதரன் |
நடிகை | ஆஷா லதா |
இயக்குனர் | விஜய் டி அலெக்சாண்டர் |
இசை | ரொனால்ட் ரெகன் வி |
ஓளிப்பதிவு | வெள்ளை கேசவன் |
நாயகன் தாமோதரனின் மனைவி ஆஸ்தா லதா தனது கணவனை விட்டு பிரிந்து தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாள். லதாவின் மகன், அதே ஊரில் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் மீது காதல் கொள்கிறான்.
அவனது காதலுக்கு, அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்க இருவரும் சந்தோஷமாக காதலித்து வருகின்றனர்.
இதையடுத்து, இருவீட்டாரும் அவர்களுக்கு திருமணம் பேசி முடிக்கின்றனர். இதையடுத்து ஒரு நாள் தனது காதலி குடும்பத்துடன் லதாவின் மகன் கோயிலுக்குச் செல்கிறார்.
அங்கு அவனது காதலியின் சொந்தக்காரர் ஒருவர், லதாவின் கணவன் குறித்து, அதாவது அந்த இளைஞனின் தந்தை தாமோதரன் குறித்து தவறாக பேச அதனால் கொதித்து எழும் நாயகன், அங்கிருந்து கோபத்துடன் செல்கிறான்.
அவனது காதலி அவனை சமாதனப்படுத்தியும் கேட்காமல் தனது தந்தை யார்? தற்போது அவர் என்ன செய்கிறார்? என்பது குறித்து தெரிந்து கொள்ள லதாவின் சொந்த ஊருக்கு செல்கிறான்.
பிளாஸ்பேக்கில் விவசாயம் செய்து வரும் தந்தைக்கு உதவி செய்யாமலும், வேறு வேலைக்கு செல்லாமலும் ஊர் சுற்றி வரும் தாமோதரன், அதே ஊரிலேயே கல்லூரியில் படித்து வரும் ஆஸ்தா லதாவை பார்க்கிறான்.
தொடர்ந்து லதாவை பார்க்கும் தாமோதரனுக்கு அவள் மீது காதல் வர, தனது காதலை அவளிடம் தெரிவிக்கிறார்.
ஜாதி வெறி கொண்ட தனது அண்ணன் மீது கொண்ட பயத்தினால் தாமோதரனின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.
இருப்பினும், தாமோதரனின் காதல் தொல்லையால், அவனிடம் தனது அன்பை வெளிப்படுத்துகிறாள். பின்னர் நாயகன், நாயகி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்க்கை நடத்தி வர ஒரு கட்டத்தில், லதாவின் அண்ணன் இருவரையும் பிரித்துவிட, தனது கணவனை பிரிந்த லதா, அப்பா யார் என்பதை தெரிவிக்காமல் தனது மகனை வளர்த்து வருகிறாள்.
இதையெல்லாம் கேட்ட அந்த இளைஞன் தனது தந்தையான தாமோதரனை சந்தித்தானா? தனது காதலியுடன் சேர்ந்தானா? என்பது படத்தின் மீதிக்கதை.
காதல் காட்சிகளிலும் சரி, விவசாயத்தை வலியுறுத்தும் ஒரு நாயகனாக தாமோதரன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆஸ்தா லதா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
மற்ற துணை நடிகர்கள் அனைவரும் கதைக்கு பக்கபலமாக தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
ஜாதி வெறி கூடாது, விவசாயம் முக்கியம் என்பதை இயக்குநர் விஜய் டி.அலெக்சாண்டர் சிறப்பாக கூறியிருக்கிறார். காதல் காட்சிகள் பார்க்கும்படி இருந்தாலும், ரசிக்கும்படியாக இல்லை.
படத்தில் பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால் அவர்களை வேலை வாங்க தவறியிருக்கிறார். படத்தில் வரும் வசனங்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.
மற்றபடி காட்சிப்படுத்தலில் கதையை தெளிவாக சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார்.
படத்தின் பின்னணி இசையில் ரொனால்டு ரீகனின் பின்னணி இசை படத்திற்கு பலம் என்றாலும், பாடல்கள் சொல்லும்படியாக இல்லை. வெள்ளை கேசவனின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘இந்திரக் கோபை’ கொலை.