இப்படத்தில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் கோவையில் தொடங்கி நடந்து முடிந்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ‘தென்காசிபட்டணம்’ படத்தில் சரத்குமாரும், நெப்போலியனும் இணைந்து நடித்திருந்தார்கள். அதன்பிறகு 2005-ல் வெளிவந்த ’ஐயா’ படத்திலும் இணைந்து நடித்திருந்தார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். ராண் என்பவர் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்மன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ‘நிசப்தம்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம்மோகன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.