உணவு சாப்பிடும் போது கைகழுவுவது வழக்கமாக உள்ளது ஆனால் சிலர் வெந்நீரில் மட்டுமே கைகளை கழுவுகின்றனர். இதன் மூலம் பாக்டீரியா கிருமிகள் அழிந்து விடும் என நம்புகின்றனர்.
அவ்வாறு அவர்கள் கருதுவது தவறு. குளிர்ந்த நீரில் கை கழுவினாலும் பாக்டீரியா கிருமிகள் அழியும். இதை அமெரிக்காவின் ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டொனால்டு ஸ்கர்பனர் தலைமையிலான விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைகளில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க கைகளை 10 வினாடிகள் கழுவினாலே போதும், என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பாக்டீரியாக்களை அழிக்க வெப்பம் தேவையில்லை வெந்நீரை விட குளிர்ந்த தண்ணீரே அதிக சக்தி கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.