ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பின் பரதநாட்டிய கலைஞராக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. சென்னையில் நாட்டிய பள்ளி நடத்தி வரும் ஷோபனா, 47 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்தார்.
அதோடு பரத நாட்டியத்தில் மட்டும் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வந்தார். இவர் அனந்தநாராயிணி என்பவரை மகளாக கடந்த 2001ம் ஆண்டு தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் குடும்ப நண்பர் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
ஆனால் இதுகுறித்து நடிகையிடம் இருந்து என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.