பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஐஸ்வர்யா ராயை நரி என்று கூறியுள்ளார். கத்ரீனா கைஃபும், ரன்பிர் கபூரும் காதலர்களாக இருந்தபோது துவங்கப்பட்ட படம் ஜக்கா ஜசூஸ். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இருவரும் பிரிந்துவிட்டனர்.
இருப்பினும் தங்கள் சொந்த பிரச்சனையை விட்டுவிட்டு படத்தை முடித்துக் கொடுத்துள்ளனர்.
விளம்பரம்
ஜக்கா ஜசூஸ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கத்ரீனாவும், ரன்பிரும் சேர்ந்து கலந்து கொண்டு வருகின்றனர். இருவரும் பேசிக் கொள்ளும் விதத்தை பார்த்தால் காதலை புதுப்பிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் லைவ்
ஃபேஸ்புக் லைவில் ரன்பிரும், கத்ரீனாவும் கலந்து கொண்டனர். அப்போது ரன்பிர் ஒரு வார்த்தை கூறியதும் தனது நினைவுக்கு வரும் நபரை கத்ரீனா தெரிவிக்க வேண்டும்.
நரி
ஃபேஸ்புக் லைவில் ரன்பிர் கபூர் நரி என்ற வார்த்தையை கூறியதும் கத்ரீனா கொஞ்சம் கூட யோசிக்காமல் ஐஸ்வர்யா ராய் பச்சன் என்று தெரிவித்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரன்பிர்
தனது வாழ்வில் முக்கியமான 5 பேரின் பெயர்களை கூறுமாறு ரன்பிரிடம் கத்ரீனா கேட்டார். அதற்கு ரன்பிரோ அப்பா, அம்மா, என் உறவினர் அயன், என் இரண்டு நாய்கள். உங்களின் பெயரை கூறலாம் என்று நினைத்தேன் கத்ரீனா ஆனால் என்றார் ரன்பிர்.