கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை கொண்டு ஸ்மார்ட்போன் தகவல்களை திருடும் பழைய மால்வேர் கண்டறியப்பட்டுள்ளது.
சேவியர் என அழைக்கப்படும் மால்வேர் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை பார்ப்போம்.
செயலிகளின் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதாக கூகுள் தெரிவித்து வருகிறது.
ஆனாலும் அடிக்கடி ஏற்படும் மால்வேர் பாதிப்புகள் கூகுளின் பாதுகாப்பு திறனை சந்தேகத்தில் ஆழ்த்தும் ஒன்றாகவே இருக்கிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் ஜூடி மால்வேர் சமீபத்திய அச்சுறுத்தலாக இருந்த நிலையில், புதிய மால்வேர் வாடிக்கையாளர்களின் தரவுகளை திருடி வருகிறது.
ட்ரோஜன் சார்ந்த கோடிங் கொண்டுள்ள சேவியர் தான் கூகுள் பிளே ஸ்டோரின் புதுவரவு மால்வேர். இதுவரை சுமார் 800 செயலிகளில் சேவியர் பாதித்துள்ளது.
இவை போட்டோ மானிபுலேட்டர், வால்பேப்பர் மற்றும் ரிங்டோன் சேஞ்சர் போன்ற செயலிகள் என டிரெண்ட்லேப்ஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவியர் மூலம் பாதிக்கப்பட்ட செயலிகளை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசிபோபர் அதிகளவில் டவுன்லோடு செய்துள்ளனர்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பாவுடன் ஒப்பிடும் போது வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் அதிகளவு டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளே ஸ்டோரில் சேவியர் மால்வேர் இருந்து வருவதாகவும், இதன் முதல் பதிப்பு ஜாய்மொபைல் என அழைக்கப்படுகிறது.
இதோடு தகவல்களை திருடி, வெளியிடும் சேவியர் போக்கு பல்வேறு வழிமுறைகளை கடக்கும் படி கடினமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் சேவியர் பல்வேறு வித்தியாச மால்வேர் கோட்களை டவுன்லோடு செய்து அவற்றை இயக்கும் தறன் கொண்டுள்ளது.
இது எத்தனை சாதனங்கள் சேவியர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
இவ்வாறான பாதிப்புகளில் சிக்காமல் இருக்க கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்யும் போது செயலிக்கு ஏற்கனவே டவுன்லோடு செய்தவர்கள் வழங்கியுள்ள விமர்சனங்களை படித்து, அதன்பின் டவுன்லோடு செய்யலாம். இத்துடன் அவ்வப்போது செயலிகளை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.