தமிழ் சினிமாவில் தூங்கா நகரம், பிரியாணி, இங்கிலிஷ்காரன் என சில படங்களில் நடித்தவர் நடிகை மதுமிதா. தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இவரது கணவர் சிவ பாலாஜியும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். அங்கு உயரிய விருதான நந்தி விருதையும் சிவபாலாஜி வாங்கியுள்ளார்.
தற்போது இவர்கள் கணவன் மனைவியுமாக இணைந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் ஹோட்டல் துவங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த ஹோட்டலின் சிறப்பே உலகின் புகழ் பெற்ற அனைத்து விதமான அசைவ உணவுகளும் கிடைக்குமாம். நண்பர்கள், உறவினர்கள் என மிக முக்கிமானவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.