விமல் நடித்த ‘களவாணி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. கேரளத்தை சேர்ந்த இவர் சுந்தர்.சி யின் ‘கலகலப்பு’ படத்தில் கவர்ச்சி நாயகி ஆனார். பின்னர் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. எனவே, எந்த வேடத்திலும் நடிக்க முன்வந்தார்.
தற்போது அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக ஓவியா நடிக்கிறார். அடுத்து விஷ்ணு விஷால் நடிக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கிறார். இதில் ஒரு சில காட்சிகளில் மட்டும் வரும் ஓவியா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடுகிறார்.
இயக்குனர் எழிலின் உதவியாளர் செல்வா இயக்கும் இந்த படத்தில் ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், யோகிபாபு, மன்சூர்அலிகான், சிங்கமுத்து உள்பட பலர் நடிக்கிறார்கள்.