நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். சினிமாவில் உச்ச நட்சத்திரம். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மருமகளான இவர் சமீபத்தில் ஏக் தில் ஹை முஷ்கில் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
மேலும் அப்படத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார்கள்.
உய்யலவட நரசிம்ம ரெட்டி என்ற இப்படத்தில் நடிக்க அவர் ரூ 9 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். இதை கேட்டு அப்படத்தை தயாரிக்கும் ராம் சரண் சற்று தயங்கினாலும் அட்வான்ஸ் கொடுத்து ஐஸ்வர்யாவை புக்கிங் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கடைசியாக ஐஸ்வர்யா ராய் ரூ 6 கோடி வாங்கியிருந்தார். அனுஷ்கா, நயன்தாரா ஆகியோர் 5, 7 என கோடிகள் வாங்கும் நிலையில் ஐஸ்வர்யாவை கமிட் செய்ததது வியப்பாக இருக்கிறது.