சின்னத்திரையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க Bigg Boss என்ற பிரபல நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் பங்கு பெறுகின்றனர்.
அவர்களுக்கு முதல் கண்டிஷன் என்னவென்றால் செல்போன் பயன்படுத்தக்கூடாது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் கலந்துகொண்ட காயத்திரி ரகுராமனின் டுவிட்டர் பக்கத்தில் என்னை நேரலையாக பாருங்கள் என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி இவர் மொபைல் பயன்படுத்தலாம் அல்லது வேறொருவர் இவருடைய பக்கத்தை பயன்படுத்தினாரா என்று கேள்வி எழுப்பி வந்தனர். அப்படி கூட எப்படி இவர் நிகழ்ச்சியின் Live வீடியோவை போடலாம் என கூறி வருகின்றனர். ஆனால் அது LIve வீடியோவே இல்லை ஒரு புகைப்படம்.