இப்போதெல்லாம் சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் கூட மினி ஹீரோ, ஹீரோயின்கள் தான். அந்தளவுக்கு சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அப்படித்தான் நந்தினி சீரியல் ஹீரோ ராகுல் ரவியும். மலையாளம் பூர்வீகமாக இருந்தாலும் தமிழில் பல ரசிகர்களை கவர்ந்து விட்டார். இவர் பத்திரிக்கைக்கு தன் சினிமா பயணம் பற்றி பேட்டி கொடுத்துள்ளார்.
சரி இவருக்கு அதிர்ஷ்டம் எப்படி அடித்தது தெரியுமா?
சிறு வயதில் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பல முயற்சிகள் செய்து முதலில் மலையாள படத்தில் ஒரு லீட் ரோலில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் குடும்பம் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தது.
நடிப்பு ஆசையை தள்ளிவைத்து விட்டு சென்ற அவருக்கு மலையாள சீரியலில் ஹீரோ சான்ஸ் தேடி வந்தது. அதுவும் நன்கு ரீச் ஆகிவிட்டது. இதுதான் அவரது வாழ்க்கையில் வந்த ட்விஸ்ட்.
நந்தினி சீரியலுக்கு முன்பே ஒரு தமிழ் பட வாய்ப்பு வர, அதற்காக தயாராகும் வேளையில் இயக்குனர் படத்தை கைவிட்டுவிட்டார். ஆனாலும் மலையாள சீரியலால் நந்தினி சீரியல் ஹீரோவாகும் வாய்ப்பு வந்தது.
ஒரே நேரத்தில் 4 மொழிகளில் வருவதால் ரசிகர்கள் பலர் எனக்கு கிடைத்துள்ளனர். சவாலான சீரியல். நிறைய கற்றுக்கொண்டேன். என் வருங்கால மனைவியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தெரிந்துகொண்டேன்
சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதே ஆசை. விரைவில் வருவேன் என உற்சாகத்துடன் கூறுகிறார் ராகுல்.