தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த பெரிய நம்பர் நடிகை. இவர் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. அனைவருக்கும் சரியாக ஒத்துழைப்பு கொடுத்து படத்தை நடித்துக் கொடுத்து நல்ல பெயரை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடுரோட்டுக்கு சென்றுவிட்டதாக வெளிவந்த செய்தியை கேட்டு யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம்.
அவர் ஒரு படத்தின் காட்சிக்காக அந்த நடிகையை நடுரோட்டில் நடந்துவரச் சொன்னார்களாம். நடிகையும் பொதுமக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் நடக்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் அவரை கண்டுகொள்ளாத பொதுமக்கள் நடிகையை கண்டுகொண்ட பிறகு அவரை மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து படக்குழுவினரை கடுமையாக திட்டி தீர்த்துவிட்டதாம். உடனே படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி படக்குழுவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்களாம். நடிகையையும் பத்திரமாக மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்களாம்.