ஆபாசமாக நடித்து மிகுந்த சர்சையை ஏற்படுத்தியவர் நடிகை ராதிகா ஆப்தே. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் கபாலி படத்தில் நடித்திருந்தார். பட நிகழ்ச்சிகளிலும் கூட சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக புனே, மும்பையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினாராம். வீட்டு உரிமையாளகள் நடிகை, நடிகர்களுக்கு வீடு தரவே பயப்படுகிறார்கள். திருமணமாகாத ஆண் அல்லது பெண்ணுக்கு வீடு கொடுத்தால் தொல்லைகள் வரும் என கருதுகிறார்கள்.
மேலும் திருமண சான்றிதழ் கேட்கிறார்கள். இதனால் புதிதாக வீடு வாங்கி குடியேறியபோது மற்றவர்கள் என் கலாச்சாரத்தை தெரிந்துகொள்வதில் தீவிரமாக இருக்கிறார்கள் என்றும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.