ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எதிர்க்கட்சியான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா பல்வேறு விஷயங்களில் விமர்சித்து பேட்டி கொடுத்து வருகிறார்.
செம்மர கடத்தலில் தொடர்பு இருப்பதாக ரோஜா குற்றம் சாட்டி இருந்தார். இதை கண்டித்து தெலுங்குதேசம் கட்சியின் மகளிரணியினர் இன்று திருப்பதியில் ரோஜாவின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.
சந்திரபாபு நாயுடுவை பற்றி அவதூறாக பேசுவதை ரோஜா நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.