இந்திய கிரிக்கெட் அணியின் ராசியான கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் மகேந்திர சிங் டோனி. இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்திய வீரர்கள் கிரேடு வாரியாக பிரிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படும். டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத வீரர்கள் குறிப்பாக ‘ஏ’ கிரேடில் சேர்க்கப்படமாட்டார்கள். ஆனால், டோனி ‘ஏ’ கிரேடில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இப்படி முன்னணி வீரர்கள் சேர்க்கப்பட்டால், டெஸ்ட் போட்டிகள் கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்திருந்தார் ரமிஸ் ராஜா.
இதற்கு டோனியின் பரம ரசிகர்கள் டுவிட்டரில் டோஸ் கொடுத்துள்ளனர்.