திருச்சியில் இருந்து சென்னை வந்து இங்கேயே தற்போது செட்டில் ஆகியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தற்போது திருச்சியில் இருக்கும் சிவகார்த்திகேயன் வீட்டின் அருகில் ஆறுமுகம் என்பவர் மர்ம மரணம் அடைந்துள்ளார். கல்குவாரி நீரில் ஆறுமுகத்தின் சடலத்தை போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டுள்ளனர்.
விசாரணையில் சடலமாக கிடந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்ட வேலை செய்து வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
தற்போது இவரின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.