பிரேசிலைச் சேர்ந்த மரினா அமரல், டிஜிட்டல் வண்ணம் தீட்டுபவர். பழைய கருப்பு வெள்ளைப்படங்களுக்கு வண்ணம் தீட்டி வரலாற்றோடு சமகாலத்துக்கு தொடர்பை ஏற்படுத்த முயல்கிறார்.
புகைப்படங்களை வண்ணத்தில் பார்க்கும்போது அவற்றின் வரலாற்றோடு பார்வையாளர்களுக்குத் தொடர்பு ஏற்படுவதாகவும் அதன் உண்மைத்தன்மை அதிகமாக உணரப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
கருப்பு வெள்ளை புகைப்படங்களில் இவர் எதையுமே மாற்றுவதில்லை. வண்ணங்களை மட்டுமே சேர்க்கிறார்.
எவ்வளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உண்மையான நிறங்களை தேர்வு செய்கிறார்.
ஆஷ்விட்ச் யூத வதைமுகாமில் கொல்லப்பட்ட மூன்று சிறுமிகள் புகைப்படம் தன்னால் மறக்கமுடியாதது. “தன் பெயரை, தன்கதையை அந்த சிறுமியே நேரில் சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்த விரும்பினேன். அதையே அந்த படங்கள் செய்தன”, என்கிறார் மரினா.