சூரியனை விட 20 மில்லியன் பில்லியன் மடங்கு அதிக அடர்த்தி கொண்ட புதிய நட்சத்திர கூட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சரஸ்வதி என பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திர கூட்டம் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மேலும், இது பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நட்சத்திர கூட்டத்தில் 42 குழுக்களாக பத்தாயிரத்துக்கும் அதிகமான நட்சத்திர கூட்டங்கள் உள்ளன.
இதனை இந்தியாவின் புனேவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டிறிந்து, இதற்கு சரஸ்வதி என்று பெயரிட்டுள்ளனர்.
இதுவே நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திர கூட்டத்திலேயே மிகப் பெரியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.