பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த உச் ஷரிப் நகரில் வாழ்ந்துவந்த 14 வயது சிறுவனை ஆடு திருடியதாக குற்றம்சாட்டி சிலர் அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர்.
இதில் அந்த சிறுவன் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு காரணமானவர்கள் மீது சிறுவனின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர்.
ஆனால், அவர்களின் புகாரின் மீது பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ஆத்திரம் அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நகரின் மிக முக்கிய சாலையில் பிரேதத்தை கிடத்திவைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, விரைந்து வந்த பொலிஸார் அவர்களை சமாதானப்படுத்தி, இந்த சம்பவத்துக்கு காரணமான மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.