செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஜூலை 28-ம் திகதி வெளியாகவுள்ளது.
இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ முதல் பாகத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் அனிருத்.
இரண்டாம் பாகத்தில் பணியாற்றாதது குறித்து அனிருத்திடம் கேட்டதற்கு, “இது வேலையில் ஒரு பகுதிதான். வழக்கமான இணையிலிருந்து விலகுவதும் நல்லதுதான்.
அப்போதுதான் மீண்டும் இணையும்போது இன்னும் வலிமையாக இருக்கும்.
எனது மற்ற படங்களினால் எனக்கும் நேரமில்லை. நான் இரண்டாவது பாகத்துக்கு இசையமைத்திருந்தால் அது முதல் பாகம் போல இல்லாமல் கூட இருந்திருக்கும்.
ஷான் ரால்டனின் இரண்டாம் பாக இசையையும், எனது முதல் பாக இசையையும் ஒப்பிடுவதில் நியாயமில்லை.
அவர் என்னை விட மிகவும் மூத்தவர் / எனது சூப்பர் சீனியர். மிகவும் அமைதியானவர்.
இந்த ஒப்பீடுகள் தேவையில்லாத இறுக்கத்தை ஏற்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ‘வேலையில்லா பட்டதாரி 2’வில் அனிருத் இடம்பெறாதது குறித்து தனுஷ், “’வேலையில்லா பட்டதாரி’ படத்தின் கதை, கதாபாத்திரங்கள், எமோஷன் காட்சிகள் ஆகியவற்றுக்கான இசை எனக்கு அனிருத்திடமிருந்து கிடைத்தது.
அந்த கதைக்கு அது சரியாக இருக்கும் என தோன்றியது.
2-ம் பாகத்தில் நாயகன் ரகுவரன் திருமணமானவர்.
ஆகையால் இதன் கதைக்கும், கதையோட்டத்திற்கும் வேறொரு இசை தேவைப்பட்டது.
இதனையே செளந்தர்யாவும் விரும்பினார். இக்கதைக்கு வேறொரு கலர் வேண்டுமென்று தான் முக்கியமான மூன்று தொழில்நுட்ப கலைஞர்களையும் மாற்றினோம்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.