அமெரிக்காவின் வாஷிங்டன் சார்ந்த விஞ்ஞானிகள், சில இந்திய வம்சாவளியினர் உட்பட சிலர் உலகின் முதல் பேட்டரி-இல்லாத செல்போன் கண்டுபிடித்துள்ளனர் இன்று நாடு முழுவதும் அனைத்து மக்களும் இந்த பேட்டரி இல்லாத செல்போனை வலைதளத்தில் தேடுகின்றனர்.
இந்த செல்போன் சுற்றுப்புற ரேடியோ சிக்னல்கள் அல்லது ஒளி மூலம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த பேட்டரி இல்லாத செல்போன். அதன்பின் இது ரேடியோ சிக்னல்களிலிருந்து அல்லது வெளிச்சத்திலிருந்து தேவையான சக்தியை பெறுகிறது.
விஞ்ஞானிகள்
விஞ்ஞானிகள் தற்போது புதிய முயற்சிகளைக் கொண்டு பல பொருட்களை கண்டுபிடிக்கின்றனர், அவ்வாறு அமெரிக்காவின்வாஷிங்டன் சார்ந்த விஞ்ஞானிகள், சில இந்திய வம்சாவளியினர் உட்பட சிலர் இந்த பேட்டரி இல்லாத செல்போனை கண்டுபிடித்துள்ளனர்.
ஆண்டெனாக்கள்
இந்த செல்போன் பொதுவாக சிறிய அளவிலான ஆண்டெனாக்களை கொண்டுள்ளது, மேலும் ரேடியோ அலைகளில் இருந்து குறிப்பிட்ட ஆற்றலை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஷியாம்
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான ஷியாம் கூறுகையில், “கிட்டத்தட்ட பூஜ்ய சக்தியை உட்கொண்ட முதல் செயல்பாட்டு செல்போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
எதிர்காலம்
எதிர்காலத்தில் அதிகப்படியான மக்கள் இந்த பேட்டரி இல்லாத செல்போனை பயன்படுத்துவார்கள் என அமெரிக்காவின் வாஷிங்டன் சார்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.