நடிகர் | பரதன் |
நடிகை | கீர்த்திகா |
இயக்குனர் | – Select Director – |
இசை | அருள் தேவ் |
ஓளிப்பதிவு | மூவேந்தர் டி எம் |
இந்நிலையில், அந்த ஊருக்கு வரும் நாயகி அன்சிபா ஹாசனையும் பார்க்கிறார். முதலில் அன்சிபா யார் என்று தெரியாமல் அவளை காதலிக்க ஆரம்பிக்கும் பரதன், பின்னர் அன்சிபா தனது சிறு வயது தோழி என்பதை அறிந்து கொள்கிறார்.
பரதனின் காதலை அன்சிபாவும் ஏற்றுக் கொள்கிறாள். இதையடுத்து அடிக்கடி சந்திக்கும் இவர்கள், ஒருநாள் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கின்றனர்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் அன்சிபாவின் அப்பாவான லிவிங்ஸ்டன், தனது மகளை கண்டிக்கிறார்.
நிச்சயதார்த்தத்துக்காக வெளியூரில் இருந்து வரும் பரதனின் அண்ணன், அன்சிபாவின் அக்காவிடம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்கிறார்.
இதையடுத்து உடனடியாக நிச்சயம் செய்து, பின்னர் திருமணமும் செய்து வைக்கின்றனர்.
இவர்களது காதலிலும் பிரச்சனை வர, இருவரும் மீண்டும் இணைந்தார்களா? அவர்களது காதல் திருமணத்தில் முடிந்ததா? அண்ணனும் – அண்ணியும் மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பரதன் இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரியுடன் இணைந்து பரதன் அடிக்கும் லூட்டி ரசிக்கும்படி இருக்கிறது.
சூரி வழக்கம்போல அவரது இயல்பான காமெடி மூலம் திரையரங்கையே அதிர வைக்கிறார். சூரியுடன் இணைந்து பிளாக் பாண்டி காமெடியில் முயற்சி செய்திருக்கிறார்.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கும், இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
அருள் தேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசையில் ரசிக்க வைத்திருக்கிறார். டி.எம்.மூவேந்தரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கிராமத்துசாயலில் நன்றாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `பாக்கணும் போல இருக்கு’ காமெடி சரவெடி