அந்த மூன்று நடிகைகளுள் ஒருவரான நான்கெழுத்து நடிகை, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
தமிழில் பட்டதாரி நடிகருடன் அரசியல் படம் ஒன்றில் இரு நாயகிகளுள் ஒருவராக நடித்திருந்தார். தற்போது அந்த நடிகை தெலுங்கில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
இதுவரை கவர்ச்சி இல்லாத பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கவர்ச்சிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதற்காக கவர்ச்சி உடை அணிந்து வித விதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் வருகிறார்.
இது தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கு கவர்ச்சிக்கு மாற தயார் என்று நடிகை விடும் தூது, என்று தெலுங்கு பட உலகினர் கூறி வருகின்றனர்.
டோலிவுட்டில் அந்த நடிகை வெற்றிநடை போடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.