உலகின் தொலைதூரப்பகுதிகளில் கிரீன்லாந்தும் ஒன்று. ஆனால் அங்கு ஏற்படும் சில மாற்றங்கள் பிரிட்டன், வங்கதேசம் போன்ற நாடுகளை பாதிக்கலாம். அதன் உறைபனியின் நிறம் கருப்பாக மாறிவருகிறது.
கருப்பு நிற பனி அதிக சூரிய கதிர்களை உட்கொள்வதால் பனிப்படலம் எதிர்பார்க்கப்பட்டதைவிட வேகமாக கரைவதாக விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து, உலகின் தாழ்வான பகுதிகளில் உள்ள இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம். இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள பிபிசி குழு கிரீன்லாந்த் சென்றது.