தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை கவர்ச்சியாக காட்டுவதற்காக தொப்புளின் மீது தேங்காய், பூவை எறிவது போன்ற காட்சிகள் குறித்து நடிகை டாப்ஸி சமீபத்தில் பேசியிருந்தார். அது பெரிய சர்ச்சையாகி பின்னர் அதற்கு டாப்ஸி மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில் இது பற்றி பேசியுள்ள நடிகை எமி ஜாக்சன், “இதுபோன்ற நிலைமை எனக்கு வந்ததில்லை. அப்படி யாராவது எனக்கு செய்திருந்தால், அதே தேங்காயை எடுத்து திரும்பி அவர்கள் மீது அடித்திருப்பேன்” என கூறியுள்ளார்.
மேலும், டாப்ஸி போல தனக்கும் பலமுறை நடந்துள்ளதாக நடிகை இலியானாவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.