விஷால் தற்போது நடிப்பது மட்டுமின்றி நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவற்றில் முக்கிய பதவிவகித்துவருகிறார். அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.
அதில் “தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் வெளியாகி உள்ளது. விஷாலின் கை, கால்களை வெட்டுவோம் என்று கொலை வெறியுடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை வெளியிட்டவர்களையும், தகவல் வெளியிட தூண்டியவர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இந்த புகார் பற்றி தற்போது சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.