இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும், அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்.
தனது வெற்றிக்குப்பின் தனது தாயார் உள்ளார் என்று கூறும் விராட் கோலி, தற்போது இரண்டு பெண்கள் (காதலி அனுஷ்கா ஷர்மாவை சேர்த்து) உள்ளனர் என்று மகளிர் தினத்தன்று கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் சதம் அடித்தார். இந்த போட்டியில் இந்தியா 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ந் திகதி கொழும்பில் தொடங்குகிறது.
இந்நிலையில பெண்களுக்கு எதிரான எண்ணங்கள் கொண்டவருக்காக ஒரு வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் விராட் கோலி.
அந்த வீடியோவில், ‘‘இது உங்களுடைய நேரம் விராட். எல்லோரும் என்னிடம் இவ்வாறுதான் சொல்கிறார்கள். சிலநேரம் நானும் அப்படித்தான் நினைத்தேன். உலகின் ஒரு ஆணாக உள்ளதால் பெருமையாக உணர்ந்திருக்கிறேன். தற்போது அதற்காக நான் வெட்கப்படுகிறேன்.
உலகில் உள்ள ஆண்களில் பலர் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள். இன்னும் இந்தஉலகம் இல்லையென்றாலும், நேரம் இருக்கிறது. அது அனைவருக்கும் சொந்தமானது. அதை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுடைய நேரம். ஜென்டில்மேனாக இருங்கள்’’ என்று விராட் கூறியுள்ளார்.