இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 26 அடி உயர தேவதை சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சிலை 1 லட்சம் கத்திகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பு அம்சமாகும.
இந்த கத்திகள் அனைத்தும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளை சேர்ந்த போலீசாரால் வழங்கப்பட்டது. இவை குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
தேவதை சிலையை அல்பிராட்லி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக உருவாக்கினார். இந்த சிலையை லண்டனில் உள்ள டிராபால்கர் சதுக்கத்தில் வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அந்த சிலை வைக்க இங்கிலாந்து அரசு அனுமதி வழங்காமல் மறுப்பு தெரிவித்துவிட்டது. இச்சிலை வன்முறையை மேலும் தூண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.