தினம்தோறும் எதாவது பிரச்சனைகள் வெடித்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லை. பிக்பாஸ் வீடு இன்று பைத்தியக்கார ஆஸ்பத்ரியாக மாறிவிட்டது, பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் தான் காரணம்.
வையாபுரிக்கு மருத்துவரும் வேடமும், பிந்து மாதவிக்கு நர்ஸ் வேடமும் கொடுக்கப்பட்டது. சக்தி மற்றும் கணேஷ் ஆகியோர் மருத்துவருக்கு துணையாக இருக்க, மற்றவர்கள் பைத்தியக்காரார்களாக நடிக்கவேண்டும்.
ஓவியா காதல் தோல்வியால் பைத்தியமாகிவிட்டார் எனவும், ஜூலி ஒரு போராட்டத்தில் கலந்துகொண்ட போது போலீஸ் மண்டையில் அடிபட்டு பைத்தியமாகிவிட்டார் எனவும் ரோல் கொடுக்கப்பட்டது.
இதுபோல மற்றவர்களுக்கும் விதவிதமாக ரோல் இருந்ததால், பிக் பாஸ் வீடே ஒரு நிஜ மனநல மருத்துவமனை போலவே இருந்தது.