நடிகர் தனுஷ் நேற்று தன் குடும்பத்துடன் தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கு வந்திருந்தனர். அப்போது 125 விவசாயிகளுக்கு தலா ரூ. 50,000 உதவியாக வழங்கினார்.
அவர்கள் ஓய்வெடுப்பதற்காக ஒரு கேரவனும் வந்திருந்தது. அதை கோயில் அருகிலேயே நிறுத்திவைத்திருந்தனர். கேரவனுக்காக மின்சாரத்தை அருகில் இருந்த ஒரு தெருவிளக்குக்கு வைக்கப்பட்டுள்ள மீட்டர் பெட்டியில் இருந்து திருட்டுத்தனமாக எடுத்துள்ளனர்.
சிலர் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்ததால் அவர்கள் உடனே வந்து ஆய்வு செய்தனர். கையும் களவுமாக பிடிபட்டதால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து 15,731 ருபாய் மின் கட்டணமும், 60 ஆயிரம் அபராதமும் விதித்தனர். அதை செலுத்திய பிறகு கேரவன் விடுவிக்கப்பட்டது.