சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் ஆளும்கட்சி அரசியலை பற்றி விமர்சித்து வந்தார். அதற்கு அதிமுக வினர்கள் சிலர் கமலுக்கு பின்னால் திமுக செயல்பாடு இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் முரசொலி 75வது வருட பவள விழாவில் நடிகர் கமல் மற்றும் ரஜினி கலந்து கொண்டார்கள். கமலுக்கு மட்டும் மேடையில் ஸ்டாலின் அருகே சீட்டு கொடுக்கப்பட்டது.
கமல் பேசுகையில் “விழாவுக்கு ரஜினி வருகிறாரா என்று கேட்டேன் வருகிறார் என்றார்கள், அவர் மேடையில் பேசுகிறாரா என்று கேள்வி கேட்டேன். இல்ல கீழே அமர்ந்து விட்டு போவார் என்றார்கள், சரி அப்போ நானும் அவருடனே கீழே அமர்ந்து விடுகிறேன் வம்புல சிக்கமாட்டோம் என்று இருந்தேன்.
அவர்கள் பத்திரிக்கை கொடுத்துவிட்டு போன பிறகு கண்ணாடியை பார்த்து கொண்டு இருந்தேன் “அட முட்டாள் தற்காப்பா முக்கியம் தன்மானம் தான் முக்கியம் எவ்வளவு பெரிய வாய்ப்பு இது என்று உணர்ந்தேன்” என கூறினார்.