ஓவியாவை வைத்து தான் பிக்பாஸ் செம்ம ஹிட் அடித்தது. அதன் TRP-யை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, ஆனால், தற்போது அவர் மன அழுத்தம் காரணமாக அதிலிருந்து விலகினார்.
இதை தொடர்ந்து தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்று பொழுதை கழித்து வருகின்றார், இந்நிலையில் ஓவியா இல்லாமல் பிக்பாஸ் TRP மிகவும் குறைந்துவிட்டது.
இதனால், அந்த தொலைக்காட்சி முன்னணி நடிகைகள் பலரையும் பிக்பாஸிற்கு வர முயற்சி செய்து வந்தது.
ஆனால், ஓவியா அளவிற்கு ரசிகர்கள் வேறு யாரையும் விரும்புவார்களா? என்றால் சந்தேகம் தான்.
அதனால், ஓவியாவிடமே திரும்ப வர தொலைக்காட்சி கோரிக்கை வைத்துள்ளதாம், ஒரு நாளைக்கு ரூ 5 லட்சம் வீதம் சம்பளமாக தருவதாகவும் பேசி வருகின்றார்களாம்.