இந்தியில் ஒரு படத்தில் நடிக்க ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி ‘நம்பர் ஒன்’ கதாநாயகியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவரை சந்தித்தார்.
அப்போது பிரியங்கா சோப்ரா அணிந்து இருந்த அரைகுறை கவர்ச்சி உடையும் அந்த உடையில் பிரதமர் முன்னால் கால்மேல் கால் போட்டு அவர் உட்கார்ந்து இருந்ததும் விமர்சனங்களை கிளப்பியது. இந்தியாவின் பெருமைக்கு குந்தகம் விளைவித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பிரியங்கா சோப்ராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் பதிவிட்டனர்.
பிரதமரை சந்திக்கும்போது புடவை கட்டி சென்று இருக்கலாமே என்றும் கண்டித்து இருந்தனர். இந்த சச்சரவு மறையும் முன்பு தேசிய கொடியை அவமதித்ததாக இன்னொரு சர்ச்சையில் தற்போது சிக்கி இருக்கிறார். சுதந்திர தினத்தையொட்டி பிரியங்கா சோப்ரா வெளிநாட்டில் இருந்து செல்பியில் எடுத்த தனது படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அந்த படத்தில் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்து கவர்ச்சியாக காட்சி அளித்தார். தேசிய கொடியை பிரதிபலிப்பது போன்ற மூவர்ணத்திலான துப்பட்டாவை கழுத்தில் சுற்றி அதன் நுனிப்பகுதியை கையில் பிடித்து இருப்பது போல் போஸ் கொடுத்து இருந்தார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
படத்தை பார்த்து சமூக வலைத்தளக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். தேசிய கொடியை அவமதித்து விட்டதாக கொதித்தனர். சமூக வலைத்தளங்களில் பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
“பிரியங்கா சோப்ரா இந்தியாவின் பெருமையை உலக அளிவில் சீர்குலைத்து வருகிறார்.” “எந்த ஆடையையும் அவர் அணியட்டும் ஆனால் சுதந்திர தினத்தில் பாரம்பரிய உடையை உடுத்த வேண்டாமா?.” “தேசிய கொடியை அவமதித்த பிரியங்கா சோப்ரா இந்தியாவுக்கு திரும்பி வரக்கூடாது” என்றெல்லாம் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் பிரியங்கா சோப்ரா அதிர்ச்சியில் இருக்கிறார்.