ஓவியா இன்று பலரும் விரும்பும் ஒரு முகம். சினிமா நடிகையான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 50 நாட்கள் ஆகும் முன்னரே மக்கள் மனங்களை வென்றுவிட்டார்.
பலத்த ஆதரவுகள் ஒரு பக்கம் குவிய, இவர் எதிர்த்தவர்களை மக்களும் விட்டுவைக்கவில்லை. கடும் விமர்சனங்களும் வந்தது. இந்நிலையில் நேற்று ட்விட்டருக்கு வந்த ஓவியா அன்பையும், அக்கறையையும் விவரித்து சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். உங்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் நன்றி என பதிவிட்டிருந்தார். இதற்கு 24 மணிநேரத்திற்குள் 49000 பேர் லைக் செய்திருந்தனர், மேலும் 14000 பேர் ரீட்வீட், 8500 பேர் கமெண்ட் செய்துள்ளனர்.