உலக அழகி என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நியாபகம் வருவது ஐஸ்வர்யா ராய் தான். இவர் திருமணம், குழந்தைக்கு பிறகு தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
ஒவ்வொரு படத்துக்கும் நிறைய வித்தியாசமான வேடங்கள் எடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் ஒரு புகைப்படத்தை ரசிகர் யாரோ மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார். அதில் ஐஸ்வர்யா ராயின் தலை முடி முழுவதும் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.