பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த ‘பழனி’ படம் மூலம் 2008-ல் தமிழுக்கு வந்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் படங்களில் நடிக்க வந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன. என்றாலும், தமிழில் பேச ஆர்வம் காட்டவில்லை. படப்பிடிப்பு நேரத்தில் ஆங்கிலத்தில் தான் பேசி வந்தார்.
இப்போது விஜய்யுடன் நடித்திருக்கும் ‘மெர்சல்’ படப்பிடிப்பின் போது விஜய்யின் விருப்பத்தின் பேரில் முடிந்தவரை தமிழில் பேசி இருக்கிறார். தற்போது ஓரளவு தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க தொடங்கியுள்ளார். விரைவில் சரளமாக தமிழ் பேசும் ஆர்வத்தில் இருக்கிறார். 9 வருடங்களுக்கு பிறகு காஜலின் தமிழ் பேசும் ஆர்வம் படகுழுவினரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது”.
அஜித்துடன் காஜல் அகர்வால் நடித்த ‘விவேகம்’ படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.