பாலிவுட் திரையுலகின் சிறந்த நடிகை கங்கனா. இவர் குயின், தானு வெட்ஸ் மானு-2 என இரண்டு படங்களுக்காக தொடர்ந்து இரண்டு வருடம் தேசிய விருது பெற்றவர்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் ஹிரித்திக் ரோஷனுடன் ஏற்பட்ட காதல், தன்னை அசிங்கப்படுத்திய இயக்குனர் கரண் ஜோகர் குறித்து பேசினார்.
இதில் எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் 52 வயதுள்ள பிரபல நடிகர் ஆதித்யா பஞ்சோலி தன்னை வீட்டு சிறையில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.
மேலும், அவருடைய மகளை விட எனக்கு ஒரு வயது குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதை அறிந்த ஆதித்யா ‘கங்கனாவிற்கு பைத்தியம் பிடித்துள்ளது, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.