அவுஸ்திரேலியாவில் இறைச்சி கால்நடை ஆய்வுகள் நிறுவனம் ஆட்டிறைச்சி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
அந்த விளம்பரத்தில் விருந்து நடக்கும் மேஜையில் விநாயகர், ஏசு, புத்தர், ஜுலியஸ்சீசர் என்று அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசுகிறார்கள்.
இறுதியில் இறைச்சி சாப்பிடுவோம் என்று சொல்வது போல் அந்த விளம்பர காட்சி இடம் பெற்றுள்ளது. சுமார் 3 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆதாயத்துக்காக இந்து கடவுள்களை கொச்சைப்படுத்துவதா? என்று உலகம் முழுவதிலும் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.