தமிழ் சினிமாவில் நடிகையாக துவங்கி, பின்னர் பாலிவுட், தற்போது ஹாலிவுட் என கலக்கிவருபவர் பிரியங்கா சோப்ரா.
இவர் ஆரம்பகாலத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்ததை நினைத்தால் தற்போது தனக்கே அருவருப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முகத்தை வெள்ளையாக்கும் என கூறி விற்கப்படும் கிரீம் விளம்பரம் பற்றி தான் இப்படி தெரிவித்துள்ளார். உடனே அந்த விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், இனி அப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்கவே மாட்டேன் என ஒரு மாத இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நிறம் சார்ந்து உள்ள பாகுபாட்டை தான் வெறுப்பதாக பிரியங்கா சோப்ரா மேலும் தெரிவித்துள்ளார்.