அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து நடிகர் சிம்புவின் AAA படம் பெரிதும் எதிர்பார்கப்பட்ட நிலையில் நிலைமை அப்படியே மாறிப்போனது. சிம்பு படம் மட்டுமில்லாது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
அவரின் நயன்தாரா, ஹன்சிகாவுடனான காதலும் கூட அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜ யோகம், ஆங்கில படம் என சிலவற்றில் கமிட்டாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரின் அப்பா டி.ஆர் திருப்பதியில் பேட்டி கொடுத்துள்ளார். இதில் சிம்புக்கு சீக்கிரம் நடக்க வேண்டி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தேன். பிடித்த பெண்ணை அவரே தேர்வு செய்வார் என அவர் கூறினார்.