விஜய் நடித்த நாளை தீர்ப்பு படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் தாமு. அதனாலோ என்னவோ அவர் விஜய்யுடன் நேருக்கு நேர், பத்ரி, துள்ளாத மனமும், துள்ளும், கில்லி, போக்கிரி, வில்லு என படங்களில் நடித்துள்ளார். இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது தினமும் ஒவ்வொரு குரலில் கத்துவாராம்.
அவரின் டீச்சர் ஆடு, மாடு தான் கத்துகிறது என நினைத்து கொண்டேயிருந்தாராம். ஒரு நாள் தலைமையாசிரியர் என்னை அழைத்து, உமது டீச்சர் இந்த நோட்டை கொடுத்தார். நீ இந்த நாளில் இந்த மாதிரி குரல் கொடுத்தாயாமே.
நாளைக்கு சுதந்திர தினம் உன்னுடைய திறமைகளை மேடையில் வெளிப்படுத்த உன்னுடைய ஆசிரியர் 15 நிமிடம் உனக்கு கொடுக்க சொல்லியிருக்கிறார். நீ திறமைகளை காட்டு என சொன்னாராம்.
நிகழ்ச்சி முடிந்ததும் எனக்கு டீச்சர் 15 ரூபாய் பரிசாக கொடுத்தார். அது தான் என் முதல் சம்பளம். இன்று ஒரு நிகழ்ச்சி செய்தால் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்குகிறேன் என சமீபத்திய நிகழ்ச்சியில் நடிகர் தாமு கூறினார்.
இவர் சூர்யா, அஜித், பிரபு தேவா, பிரசாந்த் என பல நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார்.